ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து
மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து
பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம்
அறிவித்துள்ளது.
கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதனை
சீர்செய்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,
இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும்
குறிப்பிட்டுள்ளது.

