தமது தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை
அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.
அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது
எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.

