வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்படும் ‘தானசல்’ கடைகளை, திங்கட்கிழமை முதல் பொது சுகாதார ஆய்வாளர்கள் பதிவு செய்யத் தொடங்குவார்கள் என இலங்கையில் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மூலம் பதிவு செயல்முறை தொடங்கும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
தானசாலை நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பான சிறப்பு வழிகாட்டுதல்களை
சுகாதார அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
மேலதிக தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பொது சுகாதார ஆய்வாளர்களை
அணுகுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நேற்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தீவு முழுவதும்
1382 தானசாலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சிகளுக்கான
பதிவு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

