முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல்
வாரமானது இன்று (12) ஆரம்பமாவதை முன்னிட்டு நல்லூர் பின் வீதியில்
அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக
முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வருகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பகரிவாகவும் இவ்வாறு முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளை
சுமந்தவாறு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும் வடக்கு – கிழக்கு தமிழர்
தாயகம் எங்கும் பயணிக்க தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

