2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை
நினைவுகூரும் வகையில் அனுஷ்டிக்கப்படும் மே 18 ‘தமிழின அழிப்பு நாள்’
நினைவேந்தல் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று யாழ்ப்பாண
மாநகரசபையிலும் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாநகரின் முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்ற
இந்த நினைவேந்தல் நிகழ்வில், சபா மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த
சிறப்பு நினைவுப் படத்தின் முன்பு ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி
அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும்
கலந்து கொண்டு உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர்.
எனினும் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வில்லை எனத்
தெரிவிக்கப்படுகின்றது.

