முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்
குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில், இன்று குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.
குருமன்வெளி வட்டார உறுப்பினர் அ.பத்மதேவு தலைமையில் நிகழ்வில்
ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி இந்நிகழ்வின் பிரதான அங்கமாக, ஈழப்போராட்டத்தில் தனது காலினை இழந்த மாற்றுத்திறனாளி போராளியான கோபாலசிங்கம் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அங்கு கூடியிருந்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டன.

