யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
போதைப்பொருள் வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள
கைதியொருவர் நேற்றைய தினம் நீதிமன்ற வழக்கு விசாரணை
நடைபெற்றபோது, குறித்த நபரின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்து
உத்தரவிட்டது.
அதனை அடுத்து விளக்கமறியல் கைதியை மீண்டும் சிறைச்சாலைக்கு
அழைத்து சென்ற போது, குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது
தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

