உக்ரைனின் டினிப்ரோ, சப்ரோசினியா, சுமி ஆகிய நகரங்கள் மீது ரஷ்யா
நேற்று ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர்
உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உக்ரைன் , ரஷ்யா போர் இன்று 1, 587ஆவது நாளாக நீடித்து வருகின்றது. இந்த
போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்காஇ ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட
உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க
ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்தது.
இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

