Thursday, July 2, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைகேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது

கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர்,
காரில் 78 கிலோ கேரள கஞ்சாவை கடத்தி சென்ற போது கைது
செய்யப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கடந்த 30 ஆம் திகதி
இரவு பெரியகுளம் சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில்,
சொகுசு கார் ஒன்றினை சோதனை செய்த போது அதில் கேரள கஞ்சா
78 கிலோகிராம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கேரளா கஞ்சா
மீட்கப்பட்டதுடன்,  அதில் பயணித்த நபரும் கைது செய்யப்பட்டார்.

நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வுத்
தகவலின் அடிப்படையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு,  குறித்த
வாகனம் நிறுத்தி சோதனை செய்த போது இந்த கஞ்சா
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 31 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொலிஸார்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments