அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப்
பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள்
இன்று (24) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி. மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும்
27ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 31ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், மூன்றாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

