Sunday, July 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபுத்தளத்தில் சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல்

புத்தளத்தில் சட்டவிரோத பீடி இலைகள் பறிமுதல்

புத்தளம் தளுவ கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக இலங்கைக்கு
கொண்டுவரப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியை
ஏற்றிச் செல்லத் தயாராக இருந்த லொறியொன்றை இலங்கை கடற்படையினர்
மற்றும் நொச்சியாகம பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல்
நடவடிக்கையில் கைப்பற்றியுள்ளனர்.

வடமேல் கடற்படை கட்டளைக்குச் சொந்தமான ‘தம்பபண்ணி’ கப்பலின் கடற்படையினர் நேற்று (24) மேற்கொண்ட சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான லொறியில் 20 உறைகளில் பொதியிடப்பட்டிருந்த
பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதியும் லொறியும் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக நொச்சியாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments