முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத ஜனதித் பண்டார
உட்பட ஐந்து சந்தேகநபர்களுக்கு, சீன நாட்டவருக்குச் சொந்தமான
20 மில்லியன் ரூபா பணத்தை அபகரித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்
கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் 500, 000 ரூபா பெறுமதியான சரீரப்
பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், அவர்கள் நாட்டை விட்டு
வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு பயணத் தடையையும்
விதித்தார்.
சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்இ முன்னாள் அமைச்சரின் மகனும் ஏனைய நான்கு சந்தேகநபர்களும் கடந்த ஜூலை 21ஆம் திகதி செய்யப்பட்டிருந்தனர்.

