இலங்கை விமானப் படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக ஏர் வைஸ் மார்ஷல் பத்மன் டி கொஸ்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதித் தலைமை அதிகாரியாக நேற்று(18) முதல் நடைமுறைக்கு வரும்
வகையில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விமானப் படைத் தலைமையகத்தில் விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல்
பண்டு எதிரிசிங்கவினால்இ ஏர் வைஸ் மார்ஷல் டி கொஸ்தாவுக்கான நியமனக் கடிதம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதித் தலைமை அதிகாரிக்கு விமானப் படைத் தளபதி
தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

