மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று சிக்கியுள்ளது.
உள்ளூர் மீனவர்களால் ‘கொப்பறா’ என அழைக்கப்படும் குறித்த மீன், வழக்கமாக
பிடிக்கப்படும் மீன்களை விட மிகப் பெரியதாக காணப்படுவதால், மீனவர்கள்
மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, குறித்த பிரமாண்ட மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட
புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

