Sunday, September 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைநாவலப்பிட்டியில் நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாவலப்பிட்டியில் நீரில் மூழ்கிய பல வீடுகள்

நாவலப்பிட்டி,  பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட
பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக
மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில்
மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக,  அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால்
சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக,  நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே,  லபுவெல்கொட்டுவ மற்றும்
ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும்
இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments