Sunday, September 20, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமகாவலி ஆற்றில் கடும் வெள்ள அபாயம்

மகாவலி ஆற்றில் கடும் வெள்ள அபாயம்

மகாவலி கங்கைப் படுகையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் பெருவெள்ளம்
ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக,  பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே,  அப்பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி ஊடாகச் செல்லும்
வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன்
செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் இது
குறித்து விழிப்புடன் இருக்குமாறும்,  ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கிலிருந்து
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும்
அத்திணைக்களம் மேலும் கேட்டுக்கொள்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments