Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கை300 லீற்றர் கசிப்புடன் வாகரையில் மூவர் கைது

300 லீற்றர் கசிப்புடன் வாகரையில் மூவர் கைது

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி பகுதியில் சட்டவிரோதமாக
கசிப்பு தயாரித்த மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகந்தை இராணுவ புலனாய்வுப் பிரிவினர்,  தமக்கு கிடைத்த
இரகசிய தகவலுக்கமைய கதிரவெளி விசேட அதிரடிப்படையினருடன்
இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே சந்தேக நபர்கள் மூவரும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 300 லீற்றர் கசிப்பு,  கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஒன்பது பீப்பாய்கள்,  செப்புக் கம்பிகள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments