முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழின படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்றையதினம் இடம்பெற்றது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு
முன்பாக இடம்பெற்ற இப் போராட்டத்தில் நீதி கோரி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன்
தமிழின படுகொலை தொடர்பான ஆவனங்களும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இப் போராட்டத்திற்கு பல பகுதிகளிலும் இருந்தும் பெருமளவான மக்கள்
கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

