விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட
முத்துநகர் விவசாய நிலங்களைத் திருப்பிக் கொடு என்று தெரிவித்து
விவசாயிகள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பிலுள்ள பிரதம மந்திரி அலுவலகத்திற்கு முன்னால் முத்துநகர் விவசாயிகள்
இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வியர்வை சிந்தி உழைத்த நிலம், முத்துநகர் எமது நிலம், வயலை விடுவித்து கம்பனிகளை இடமாற்று உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

