முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபட்டு வந்த ஒருவர் ஹெரோயின்
போதைப்பொருளுடன் கைதாகியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில்
பதிவாகியுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நாவற்குழி பகுதியில் வைத்து
அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
இதேவேளை, ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஜந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு பெண் மற்றும் நான்கு ஆண்கள் உள்ளிட்ட ஐவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, ஒவ்வொருவரிடமிருந்தும் மொத்தமாக 4 கிராம் 530 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

