சுனாமி ஆழிப்பேரலையின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல், உடுத்துறை
சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் ஆரம்பமானது.
சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்காக உடுத்துறையில் அமைக்கப்பட்ட பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் ஆரம்பமானது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் ,
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள், ஆகியோர் கலந்துகொண்டு பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

