Friday, May 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்
செயற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு
இன்று (14) முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயற்பாட்டாளர்களில்
ஒருவரான இராமலிங்கம் சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடானது, ஒட்டுசுட்டான்
பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் இலங்கைத்
தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,
பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன்,  பொதுமக்கள்
பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments