Saturday, June 13, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசான் விஜயலால் டி சில்வாவை பிணையில் செல்ல அனுமதி

சான் விஜயலால் டி சில்வாவை பிணையில் செல்ல அனுமதி

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக
கைது செய்யப்பட்ட தென்மாகாண முன்னாள் முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வாவை கொழும்பு நீதவான் நீதிமன்றம்,  பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகம,  இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னரே இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி,  சந்தேகநபர் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டதுடன் வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்த நீதவான்இ அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments