இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை
அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
உறவுமுறை மற்றும் நட்புறவு அடிப்படையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது,
இருதரப்பு பரஸ்பர அக்கறை கொண்ட பல்வேறு முக்கிய விடயங்கள்
தொடர்பாக இருவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மிகவும் சுமுகமான சூழலில் இடம்பெற்ற இச்சந்திப்பானது, இருதரப்பினருக்கும்
இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

