Tuesday, July 7, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைசிறை மோதல் தொடர்பான விரிவான விசாரணைக்கு குழு நியமனம்

சிறை மோதல் தொடர்பான விரிவான விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணையை நடத்தி, சம்பவத்திற்கான காரணங்கள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான
சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை
உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக, இன்று (06) கூடிய
அமைச்சரவை குழுவொன்றை நியமிக்க அனுமதி அளித்துள்ளது.

அந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்,  ஜனாதிபதி சட்டத்தரணி
மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மோகன் வீரக்கோன்
ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் இச்சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும்
விரிவாக விசாரணை செய்துஇ தமது பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை
அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments