முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான
சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்
வைக்குமாறு கோட்டை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று
(22) எடுத்துக் கொள்ளப்பட்ட போதேஇ இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக
சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளார்.

