காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இளஞ்சிவப்பு நிற நீண்ட கை சட்டையையும், அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

