தெஹிவளை, கவுதானை பகுதியில் உள்ள சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள
வீடொன்றின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில்
சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தையும்
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இத்தாக்குதலை மேற்கொண்ட நபரை முச்சக்கரவண்டியில் ஏற்றி வந்து
உதவிய குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கி
ஒத்துழைப்பு அளித்த மற்றொரு சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

