மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில்
முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும்
‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில்
17 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20இ000 பேரில், 1654 பயனாளிகளுக்கு
காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்
இன்று அம்பாறை வீரசிங்க விளையாட்டங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட
பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும்
நிகழ்வில் கலந்து கொண்டனர்.

