Wednesday, June 24, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபயணிகளை காப்பாற்றிய சாரதி

பயணிகளை காப்பாற்றிய சாரதி

பலாங்கொடையிலிருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை
போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தின் பின் சக்கரங்களின்
ஆணிகள் லுாசாகி நடக்கவிருந்த பெரும் விபத்தை பேருந்து சாரதி தடுத்துள்ளார்.

அப்போது பேருந்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பலாங்கொடை டிப்போவிற்குச் சொந்தமான அந்த பேருந்தின் சாரதியாக அஜித் குமார கடமையாற்றியதாகவும் அவரின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை சுமார் 6.50 மணியளவில் பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கி பேருந்து புறப்பட்டது.

இதன்போது சக்கரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை பெரும் முயற்சியுடன் சாரதி நிறுத்தினார்.

பின்னர் அவர் சக்கரங்களை சரிபார்த்தபோது,  ​​பின் சக்கரங்களின் ஆணிகள் லுாசாகி இருந்ததை அவதானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments