Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபொலிஸ் மா அதிபரின் நியமனத்தில் தலையிடப் போவதில்லை

பொலிஸ் மா அதிபரின் நியமனத்தில் தலையிடப் போவதில்லை

பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை
தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பான விடயங்களில் தலையீடு செய்வதை
தவிர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பாக ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்கவேண்டிய தேவை ஏற்படும் எனவும் சட்டவல்லுநர்கள் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்துள்ளனர்.

மேலும் இந்த நியமனத்தை முன்னிலைப்படுத்தி தனக்கு எதிராக மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டக்கூடும் என்றும் சட்ட வல்லுணர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரியப்படுத்தியுள்ளர்.

எனவே பொலிஸ்மா அதிபர் விடயத்தில் தலையீடு செய்வதை தான் தவிர்த்து கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments