Saturday, June 27, 2026
https://thaaitv.com/
Homeஉலகம்பிரித்தானிய மற்றும் அமெரிக்க வணிக கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்

பிரித்தானிய மற்றும் அமெரிக்க வணிக கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும்

இனி வரும் காலங்களில்,  பிரித்தானிய மற்றும் அமெரிக்க வணிக கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏமன் மீது,  அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டுப்படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டுப்படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில்இ ஏமனின் ஹூடைடா விமான நிலையம் மற்றும் கமரன் தீவு ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து இதுவரை எவ்வித விபரங்களும்
வெளியாகவில்லை. எனினும்இ இந்த தாக்குதல் காரணமாக அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். அதன்படி,  செங்கடல் வழியாக பயணிக்கும் இஸ்ரேல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கப்பல்கள் மீதுஇ ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதில் அமெரிக்காஇ பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் வணிக கப்பல்களும் சேதம் அடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவேஇ செங்கடல் வழியாக பயணிக்கும் வணிக கப்பல்களை பாதுகாக்க அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுப்படையில் பிரித்தானியாஇ ஜெர்மனி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

குறித்த கூட்டுப்படையினர் செங்கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன்,  ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு உடனடியாக பதிலடி தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையேஇ ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,  இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை குறிவைத்து அண்மையில் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும்,  10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்துஇ ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு அறிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயேஇ இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டுப்படையினர் ஏமன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments