Wednesday, May 6, 2026
https://thaaitv.com/
Homeஇந்தியாநாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர்

நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த இந்திய பிரதமர்

தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இந்திய பிரததர் நரேந்திர மோடி
நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும்
எனவும் ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தல் 2024 மக்களவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியது. உத்தரபிரதேசம் ,குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் , பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது,

இந்தியாவின் தேர்தல் உலகின் ஜனநாயக நாடுகளுக்கு உதாரணமக இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 64 நாடுகளில் தேர்தல் நடைமுறை உள்ளதாகவும் அவையனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தேர்தல் கள நிலவரத்தை ஆய்வு செய்ய செல்லும் ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர கேட்டுக்கொண்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments