2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை பரேட் சட்டத்தை
தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக வங்கிகளால் வழங்கப்பட்ட
கடன்களை வசூலிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம்
இன்று பாராளுமன்றத்தில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் திருத்தங்களைச்
சமர்ப்பித்த போதிலும், அது 25 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

