ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிகளை ஏற்றிச் சென்ற
பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பயணிகளுடன் வந்துக் கொண்டிருந்த பேருந்து
கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஆற்றில் கவிழ்ந்தது.
இந்த பேருந்தில் மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கிய பேருந்தில் இருந்து 12 பேரை அவசர உதவியாளர்கள்
மீட்பு பணி முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள்
தெரிவிக்கின்றன.

