வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதால்
வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடுஇ கால்நடைகளும் அழிந்துள்ளன.
வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன.

