Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதடையேற்பட்டுள்ள பதுளை - கொழும்பு ரயில் சேவை

தடையேற்பட்டுள்ள பதுளை – கொழும்பு ரயில் சேவை

மலையகத்திற்கான ரயில் சேவையில் தியத்தலாவை – ஹப்புத்தளைக்கும்
தியத்தலாவை – பண்டாரவளைக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் இன்று காலை
பாரிய டர்பெண்டைன் மரங்கள் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் – கொழும்பு கோட்டைக்கும் இடையிலான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ‘உடரட்ட மெனிகே’ ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்திலும்இ கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு அஞ்சல் ரயில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்இ சீரற்ற காலநிலையுடன் ரயில் பாதையில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன், தியத்தலாவை இராணுவ முகாம் அதிகாரிகள் ரயில் பாதையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments