பொலன்னறுவை தேசிய பூங்காவின் கால்வாய் பகுதியில் நேற்று சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த காட்டு யானைகளின் 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
8, 9, 10 வயதுடைய ஐந்து குட்டி யானைகளின் உடல்களும், 30 மற்றும் 35 வயதுடைய
இரண்டு பெரிய யானைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹந்தபன்வில வில்லுவாவின் கால்வாய் பகுதியில் ஏழு யானைகளின் உடல்கள்
அழுகிய நிலையில் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

