Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சு செலவினம் மூன்று மடங்கு அதிகரிப்பு?

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சு செலவினம் மூன்று மடங்கு அதிகரிப்பு?

கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது,  இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சு செலவினம் மூன்று மடங்கு அதிகரிக்கக்கூடும் என அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப் பணிகளுக்காக சுமார் 800 மில்லியன் ரூபாய் செலவிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டின் நீளம் 27 அங்குலமாக இருந்தது.

இந்த முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால்,  வாக்குச் சீட்டின் நீளம் அதிகரிக்குமாயின் அச்சிடும் செலவுகளும் அதிகரிக்கக்கூடும் எனவும் அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments