Sunday, May 10, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கையாழில் வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த மூவர் கைது

யாழில் வீடொன்றில் நுழைந்து அட்டகாசம் செய்த மூவர் கைது

யாழ்ப்பாணம் – வல்வெட்டித் துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.

டுபாயில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுக்கமைய இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு பொலிஸாரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆறு பேர்,  வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மூன்று இலட்சம் வரையான
பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும்,  அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசாரணையின் போது டுபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும்,  அதற்கமைய கூலிப்படை குறித்த வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments