கந்தளாய் பிரதேச செயலகம் மற்றும் கந்தளாய் தள வைத்திய சாலையிலும் இன்று
அமைதியான முறையில் அஞ்சல் வாக்கு பதிவு இடம்பெற்று வருகின்றது.
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப் பதிவு இன்று(06) கந்தளாய் மருத்துவமனை மற்றும் கந்தளாய் பிரதேச செயலகத்திலும் இடம் பெற்று வருகின்றது .
கந்தளாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 150 ஊழியர்கள் தங்களது வாக்கு பதிவுகளை மேற்கொண்டனர்.
அதேவேளைஇ கந்தளாய் தள வைத்தியசாலையில் 24 ஊழியர்களும் அஞ்சல் வாக்காளர்களாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
காலை 9:30 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு நடவடிக்கைகள், அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது .
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுத்தல்களுக்கு அமைவாக அஞ்சல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது .

