இன்று (22) நண்பகல் 12 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் அதன் பின்னர் நீடிக்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று (21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம்
அமுல்படுத்தப்பட்டதையடுத்து, அதனை இன்று நண்பகல் 12 மணி வரை நீடிக்க
அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இலங்கையின் 9வது ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்று முடிவுகள்
தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

