Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான நிலையில் முன்னெடுப்பு

தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான நிலையில் முன்னெடுப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில்
இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேலையில் கிளிநொச்சியிலும் சுமூகமான முறையில்
தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது என கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் முரளிதரன் தெரிவித்தார்.

பொலிஸார் தமது தபால் மூல வாக்குகள் வாக்களிக்க விசேட தினமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் தங்களது தபால் மூல வாக்குகள் கிளிநொச்சி மாவட்ட செயலகம்,  பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையங்களில் வாக்களிக்கின்றனர்.

அத்துடன்,  கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிக்க 3, 955 பேர் தகுதி பெற்றுள்ளதுடன் அந்த வகையில் ,  இன்று மாவட்ட செயலகம்,  பொலிஸ் திணைக்களம், தேர்தல் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்கள் இன்று தபால் மூலம் வாக்களிப்பு செய்தார்கள் ஏனைய தபால் மூல வாக்களிப்பு நவம்பர் மாதம் 4ஆம் திகதி தங்களின் வாக்குகளை பதிவு செய்யவுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments