Friday, August 14, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

தேநீர் அருந்திக்கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த
இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதன் போது மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த உதயகுமார் சஜிந்தன் (வயது 32) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் இன்று காலை தனது வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்றுள்ளார். இந்நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பினால் அவரது மரணம்
சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments