Friday, June 26, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபோலியென நிரூபித்தால் பதவி விலக தயார்: சஜித் அதிரடி அறிவிப்பு

போலியென நிரூபித்தால் பதவி விலக தயார்: சஜித் அதிரடி அறிவிப்பு

தாம் முன்வைத்துள்ள கல்வித் தகைமைகள் போலியானவை என நிரூபித்தால்,
நாடாளுமன்ற உறுப்பினர்,  எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் பதவிகளில் இருந்தும் விலகத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று சபையில் சமர்ப்பித்தார்.

தனது முன்பள்ளிக் கல்வியை செயின்ட் பிரிட்ஜெட்ஸ் கான்வெண்டிலும்,  ஆரம்பக் கல்வியை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும், தரம் 6 முதல் தரம் 9 வரை றோயல் கல்லூரியிலும் கற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

பின்னர் அவர் இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் படித்ததாகவும்,  1983 – 1984 ஆம் ஆண்டில்,  அந்த நாட்டில் பொதுத் தேர்வுக்குத் தோற்றியதாகவும்,  தேர்வில்
2 ஏஇ 2 பி மற்றும் 3 சி பெற்றதாகவும்இ பெறுபேறுகளை காண்பித்தார்.

அத்துடன்,  உயர்தரப் பரீட்சையில் 2 பி சித்தியும் ஒரு சி சித்தியும் பெற்று சித்தியடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

லண்டன் பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பள்ளியில் நுழைந்து 1991 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தனது பட்டப்படிப்பை முடித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

பின்னர்,  அவர் அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக்கழக கல்லூரி பூங்காவில் சேர்ந்தார் மற்றும் பொது மேலாண்மை குறித்த முதுகலைப் படிப்பில் சேர்ந்தார்.

இதேவேளை,  2021 ஆம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து
முதுகலைப் பட்டம் கற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments