மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலையின் மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நிகழ்வும் பிறீடம் பாலர் பாடசாலையின் அதிபர் சட்.எம்.நஸ்ஹான் தலைமையில் மாவடிப்பள்ளி கமுஃகமுஃஅல்-அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் இன்று நடைபெற்றது.
பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா செயளாலர் எஸ்.இம்தியாஸ்.கலந்து சிறப்பித்ததோடு. கௌரவ அதிதிகளாக எம்.எச்.எம்.சறூக் -பல் அறுவை சிகிச்சை நிபுணர் -அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை கல்முனை மற்றும் கமுஃகமுஃஅல்- அஷ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன், ஜ.எல்.எம். அனிஸ்-வெளிக்கள உத்தியோகத்தர்இ ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஜ.எம்.சைபூதின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர் தலைமைத்துவம், மூத்தவர்களுக்கு மதிப்பளித்தல், பெற்றோர்கள் கட்டளைகளுக்கு ஏற்ப சிறுவர்கள் செயல்படுதல், கிரகித்தல் , மற்றும் மாதிரி தலைமைத்துவ தலைவர்கள் உருவாக்குதல்இநல்லொழுக்கம் உள்ள பிள்ளைகளாக சமூகத்தில் உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் அதிதிகளால் பேசபட்டதோடு. தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள், நினைவு சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.



