Saturday, August 15, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைபிரதமரைச் சந்தித்த ருவாண்டா உயர் ஸ்தானிகர்

பிரதமரைச் சந்தித்த ருவாண்டா உயர் ஸ்தானிகர்

புதுடில்லியில் வசிக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா,  பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி ஹமரசூரியவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் முக்கிய துறைகளில் கவனம்
செலுத்தும் விவாதங்களுடன். ருவாண்டாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்த ஒரு சந்திப்பாக இது அமைந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது,  ​​இலங்கையுடன் வலுவான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடர்வதற்கான ருவாண்டாவின் உறுதிப்பாட்டை முகங்கிரா வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம்இ முதலீடு மற்றும் அறிவு பரிமாற்றத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments