Sunday, June 28, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைமுன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது: சுமந்திரன் வெளியிட்ட கருத்து

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கைது: சுமந்திரன் வெளியிட்ட கருத்து

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து
பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது என்று சட்டத்தரணி சுமந்திரன்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு
இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

அனைத்து நாட்டுத் தலைவர்களும் தங்கள் பதவிக் காலத்தில் செய்யப்பட்ட கடுமையான குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து
பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது . யாரும் சட்டத்திற்கு
அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதாகக்
கூறப்படும் குற்றத்திற்காக பிணை மறுக்க வேண்டிய நேரமும் வலியுறுத்தலும்
கேள்விகளை எழுப்பியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவர் சார்பில் முன்னிலையான
சட்டத்தரணியால் பிணை கோரப்பட்டது. எனினும் அவருக்குப் பிணை வழங்கப்படாது
நேற்றைய தினமே விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரணில்,  சுகயீனம் காரணமாக
சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது கொழும்பு
தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments