Thursday, August 6, 2026
https://thaaitv.com/
Homeஇலங்கைதாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ரணில் வெளியிட்ட கருத்து

தாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ரணில் வெளியிட்ட கருத்து

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20) தாம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசேட உரையொன்றை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போதே அவர்
இவ்வாறு கூறினார்.

குறித்த முறைப்பாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய
செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தாம் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து
திரும்பியதாகவும்இ கொழும்பு திரும்புவதற்கு முன்பு ஒரு இரவை அங்கேயே
கழித்ததாகவும் குறிப்பிட்டதுடன் இந்த செயல்முறை முற்றிலும் உத்தியோகபூர்வ விஜயம் என்றும் அவர் கூறினார்.

தாம் அங்கு இருந்ததால் தமக்கு கிடைத்த உத்தியோகபூர்வ அழைப்பை
ஏற்றுக்கொண்டதாகவும்,  அவ்வாறான உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாது
இருந்திருப்பினும் தாம் இங்கிலாந்திலேயே அன்றைய தினம் இருந்திருப்பேன்
என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments