வடமாகாணத்தில் சைவ மாணவர்கள் மீது கிறிஸ்தவ மேலாட்சி கடுமையாக
மேலோங்கி வருகின்றது. இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து இன்று
போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் சிவசேனை
அமைப்பினராலே இன்று உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பல பாடசாலைகளில் சைவ மாணவர்கள் மீது கிறிஸ்தவ மேலாட்சி இடம்பெறுகின்றது. இதனால் சைவ மாணவர்கள் பெரும் அவலத்தை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே சிவசேனை அமைப்பினரால் இன்று போராட்டமொன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

